Wednesday 16 April 2014

முப்பொழுதும் உன் கற்பனையில்

நீ... கானல் நீர் என்று தெரிந்தும்
அள்ளி பருக நினைக்கிறேன்! 
நீ... தூரத்து நிலவு என்று தெரிந்தும்
தொட்டுவிட நினைக்கிறேன்! 
நீ... கையில் சிக்காத
காற்று என்று தெரிந்தும்
எட்டி பிடிக்க நினைக்கிறேன்! 
நீ... என் மீது வைத்திருக்கும்
அன்பு தாமரை இலை மீது
இருக்கும் தண்ணீர் போல என்று
தெரிந்தும் உனக்காக
உயிரையும் கொடுக்க நினைக்கிறேன்! 
இவை யாவும் கானல்
சுகம் தான் என்று
என் அறிவுக்கு தெரிந்தும்
என் மனதிற்கு தெரியவில்லை
ஏனெனில் நான் வாழ்வது
முப்பொழுதும் உன் கற்பனையில்!   

No comments:

Post a Comment