Wednesday 16 April 2014

வன்கொடுமை














மேற்கு வங்கத்தில்
மேடை அமைத்து பலர்
அறிய பெண் கற்பழிப்பு!



இந்திய தேசத்தில்
பெண்கள் தெய்வமாம்
 மதிப்பாம் மரியாதையாம்
வெட்கக்கேடு!

அண்டை நாட்டில்
 மானபங்கம் செய்யப்பட்ட
பெண்ணுக்காக மறியல்
செய்கிறோம் கொடிப்பிடிக்கிறோம்
கோசங்கள் போடுகிறோம்
பொது சொத்துக்களை
தீயிலிட்டு கொளுத்துகிறோம்
சிறை செல்கிறோம் - அதை
 வைத்து பொலப்பை நடத்துகிறோம்!

அதே கொடுமை
நம் நாட்டில் நடக்கும் போது
கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கிறோம்
ஊருக்கு மட்டும்தான் உபதேசமா?

 சுதந்திர இந்தியாவில்
பெண்கள் தனியாக
செல்ல வழியில்லை
கோவில்களில் கூட
பாலியல் தொல்லை -
இவற்றையெல்லாம்
மூடி மறைத்துவிட்டு
மற்ற நாடுகளுக்காக
வரிந்துக் கட்டிக்கொண்டு
செல்கிறோம்!

வாருங்கள்...
முதலில் நம்நாட்டை
 சுத்தம் செய்வோம் - பிறகு
எப்படி சுத்தம் செய்வதென்று
 மற்றநாடுகளுக்கு உபதேசம்
செய்வோம்!

காம வெறியர்களையும்
இன வெறியர்களையும்
தீயிலிட்டு கொளுத்துவோம்
 இனமொழி சாதிமத
வேறுபாடற்ற இந்தியா என்று
உலகிற்கு பறைசாற்றுவோம்
 பிறகு நம் தேசியக்கொடியை
விண்ணுயர பறக்கவிட்டு
தலைநிமிர்ந்து
வணக்கம் சொல்வோம்!

No comments:

Post a Comment