Wednesday 16 April 2014

காதல்

இதயத்தில் கல்லெறிந்து விட்டு
இருப்பிடம் சென்றுவிட்டாய் நீ
நெருப்பிடம் அகப்பட்ட
புழுவாய் துடிக்கிறேன் நான்
ரம்மியாய் இருக்கிறது உனக்கு
ரணமாய் இருக்கிறது எனக்கு
அன்றொருநாள் நீ சொன்ன வார்த்தை
அடிக்கடி என் காதில் ஒலிக்கிறது
வஞ்சகமாய் வலை விரித்து விட்டாய் நீ
வகையாய் மாட்டிக்கொண்டேன் நான்
இப்போது தனிமைகூட
இனிமையாக இருக்கிறது
உன் நினைவால்

No comments:

Post a Comment