Friday 25 April 2014

கோபம்

நீ கோபத்தில் இருப்பதால்
என் கைபேசி அலறுவதை
நிறுதிக்கொண்டது..!

நீ எப்படியோ?
எனக்கு வரும் அழைப்புகளும்
குறுஞ்செய்திகளும் நீயாக
இருக்குமென்று
எட்டிப் பார்க்கவைக்கிறது..!

மவுனமாய் கொள்ளாதே
மரணித்துவிட போகிறேன்
தள்ளிவைக்க நினைக்காதே
என்னைவிட்டா உன்னை
தாங்கிகொள்ள என்னைப்போல்
உனக்கு யாருமில்லை..!

நீ வேறு நான் வேறு என்று
நீ நினைக்கலாம் என்னால்
அப்படி நினைத்திட முடியவில்லை
என்றேனும் ஒருநாள்
என்னை புரிந்துகொள்வாய்
அப்போது உன் கன்னதில்
வழியும் கண்ணீரை துடைக்க
நான் இருக்கபோவதில்லை..!

No comments:

Post a Comment