Wednesday 16 April 2014

காலச் சுவடுகள்

                   ஆதி மனிதன் கற்களை கருவியாக்கி விலங்குகளிடம் தன்னை எப்படி காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் உணவு பழக்க வழக்கங்களை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்றும் பின் வரும் மனிதற்கு விட்டுச் சென்றான். தெய்வ புலவர்கள் அற நெறிகளையும், வாழ்க்கை நெறிகளையும் தாங்கள் வாழ்ந்த காலங்களில் ஓலைச் சுவடிகள் மூலம் நமக்கு விட்டுச் சென்றனர். அரசர்கள் போர் முறைகளையும், அரசால்கின்ற முறைகளையும், வீத்தையும், சேர்த்த செல்வங்களையும் நிலவறை கரூவூலங்களில் பாதுகாத்தும் அதை அறிய ரகசிய கல்வெட்டுகள் மூலம் நமக்கு விட்டுச் சென்றனர்.

                 ஆங்கிலேயர்கள் நம் நாட்டுக்கு வந்து சாலைகளையும, போக்குவரத்து முறைகளையும் மின்சாரத்தையும், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தையும் நமக்காக விட்டுச் சென்றனர். ஆனால் நாம் நம் சங்கதினருக்கு என்ன விட்டுச் செல்லப் போகிறோம்? சிடிகளையும், பென்டிரைவுகளையுமா? அந்த காலத்தில் அழியாத கல்வெட்டுக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தைச் சொன்னது. நம் காலத்தில் நாம் எப்படி வாழ்ந்தோம் என்று சொல்ல நாம் விட்டு செல்லப்போவது என்ன? நாம் வாழ்வது கலியுகம் அது மண்ணோடு மண்ணாகி, விண்ணாகி காற்றிலே கலந்திடுமோ..?

No comments:

Post a Comment