எனக்குத் தெரியாமலே...
என் கண்ணுக்குள் மணியானாய்!
எனக்குத் தெரியாமலே...
என் இதயத்தின் துடிப்பானாய்!
எனக்குத் தெரியாமலே...
என் உயிருக்குள் உயிரானாய் - ஆனால்
என்னைவிட்டு பிரியும்போது மட்டும்
ஏன் தெரிந்தே சென்றாய்..?
நீ என்னைவிட்டு எங்கே சென்றாலும்
உன் கூடவே வருவேன்
உன் நிழலாக...
உன் சுவாசமாக..
உன் உயிராக..!
- ஸ்ரீசந்திரா
No comments:
Post a Comment