Sunday 27 April 2014

கடிதம்



அன்புள்ள... தோழி!
எப்படி இருக்கிறாய்?
நலம்தானே! ஆனால்
நான் நலமோடு இல்லை
நீ நலமோடு இருப்பாய்
என்று நினைக்கின்றேன்..!
காதலில் கருத்து வேறுபாடு
வருவதுண்டு நட்பில் வருமா?

வந்துவிட்டதே நீ வருத்தப்படுவாய்
என தெரிந்திருந்தால் நான் அந்த
கேள்வியை கேட்டிருக்க மாட்டேன்..!
என் மீது என்ன தவறென்று
இதுவரை நான் அறியேன்
கேட்க கூடாத கேள்வியா
கேட்டுவிட்டேன் இல்லையே
உன் கோபம் எனக்கு புரியவில்லை..!
ஒருவேளை என்னோடு பேச
உனக்கு விருப்பம் இல்லையா?
அதனால்தான் சின்ன விஷயத்தை
பெரிசுபடுத்தி விட்டாயா?
என் மனதை இப்படி யாரும்
கஷ்டப்படுத்தியது இல்லை
மனசு வலிக்கிறது..!

வேலை செய்ய முடியவில்லை
படிக்க முடியவில்லை
யாரோடும் பேச பிடிக்கவில்லை
எல்லோரிடம் எரிந்து விழுகிறேன்
தனிமையை விரும்புகிறேன்
தனியா அழுகிறேன்..!
உனக்கு எந்த கஷ்டமும்
இருக்காது ஏனெனில்
நான் உனக்கு பத்தோடு பதினொன்னு
இது தெரியாமல் நெருங்கி தொலைத்துவிட்டேன்
இப்ப நெருப்பில் வேகுகின்றேன்..!

நீ தந்த சந்தோஷத்தோடும்
நீ தந்த வலியோடும் என்றும்
உன் நினைவோடு நான்..!

No comments:

Post a Comment