Thursday 17 April 2014

நான் கவிதையாகிறேன்















நான் கவிதையாகிறேன்...
 நீ கவிபடைக்கும்போது!
கற்சிற்பமாகிறேன்...
நீ சிற்பியாகும்போது!
காகிதமாகிறேன்...
நீ ஓவியம் தீட்டும்போது!
கானமாகிறேன்...
நீ காவியம் பாடும்போது!
தென்றலாகிறேன்...
 நீ உணரும்போது!

தேவதையாகிறேன்...
நீ பக்தனாகும்போது!
புன்னகையாகிறேன்...
நீ சிரிக்கும்போது!
பூக்களாகிறேன்...
நீ பறிக்கும்போது!
 மழையாகிறேன்...
நீ நனையும்போது!
 மாலையாகிறேன்...
 நீ கோர்க்கும்போது!
வில்லாகிறேன்...
 நீ வளைக்கும் போது
இவை அத்தனையும்
உனக்கு நானாகிறேன்
நீ என்னை ரசிக்கும்போது!

No comments:

Post a Comment