வீடு மொழுகி சாணம்
தெளித்து கோலமிட்டால்
கிருமிநாசினி என்று
சொல்லித் தந்தவர்கள்
வேப்பிலையை படுக்கையாக்கி
மஞ்சல் நீரில் ஸ்நானம் செய்தால்
அம்மைநோய் குணமாகும் என்று
சொல்லித் தந்தவர்கள்
நீராடிய பிறகு திருநீர்
பூசிக்கொண்டால்
நீர்கோர்க்காது என்பதற்காக
கடவுளை வணங்க
சொல்லித் தந்தவர்கள்
அயல்நாட்டிலும்
வியாபாரம் செய்ய வணிகம்
சொல்லித் தந்தவர்கள்
விண்ணிலும் ஆராய்சி செய்ய
அறிவியலை சொல்லித் தந்தவர்கள்
வீரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள
வரலாற்றை சொல்லித் தந்தவர்கள்
ஏன்... களவியலையும் காதலையும்
கூட பாடமாக சொல்லித் தந்தவர்கள்
தவறு செய்தால் என்ன தண்டனை
கிடைக்குமென்று சொல்லும்
கருடபுராணத்தை சொல்லித் தராமல்
போனதும் ஏனோ..?
No comments:
Post a Comment