Thursday 17 April 2014

சாடல்

























வீடு மொழுகி சாணம்
தெளித்து கோலமிட்டால்
கிருமிநாசினி என்று
சொல்லித் தந்தவர்கள்
வேப்பிலையை படுக்கையாக்கி
 மஞ்சல் நீரில் ஸ்நானம் செய்தால்
அம்மைநோய் குணமாகும் என்று
சொல்லித் தந்தவர்கள்
நீராடிய பிறகு திருநீர்
பூசிக்கொண்டால்
நீர்கோர்க்காது என்பதற்காக
கடவுளை வணங்க
 சொல்லித் தந்தவர்கள்
அயல்நாட்டிலும்
வியாபாரம் செய்ய வணிகம்
சொல்லித் தந்தவர்கள்
விண்ணிலும் ஆராய்சி செய்ய
அறிவியலை சொல்லித் தந்தவர்கள்
வீரத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள
வரலாற்றை சொல்லித் தந்தவர்கள்
 ஏன்... களவியலையும் காதலையும்
கூட பாடமாக சொல்லித் தந்தவர்கள்
 தவறு செய்தால் என்ன தண்டனை
கிடைக்குமென்று சொல்லும்
கருடபுராணத்தை சொல்லித் தராமல்
 போனதும் ஏனோ..?

No comments:

Post a Comment