Friday, 23 October 2015

அரத்தை, அல்லி / மூலிகை மருத்துவம்

ஓமம்:

ஓமத்தை இளம் வறுவலாக வறுத்து பொடித்து ஒரு தேக்கரண்டி அளவாக மூன்று வேளைகள் உணவுக்கு முன் உட்கொள்ளவும். குழந்தைகளுக்கு தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவிட்டுக் கொடுக்கலாம். கழிச்சல், பால் கக்குதல், அசீரணம் குணமாகும்.

Thursday, 22 October 2015

தமிழகத்திற்கு தண்ணில கண்டமா?

            "நீரின்றி அமையாது உலகு" என்று வள்ளுவ பெருந்தகை நமக்கு உணர்த்திருக்கிறார். நமது வாழ்க்கையின் ஆதாரமே நீர் தான். முதன் முதலில் உயிர்கள் தோன்றியது நீரில் இருந்துதான். அப்படிப்பட்ட நீரால் எப்போதும் தமிழகம் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் தண்ணீர் விடாமல் கர்நாடகம் பிரச்சனை செய்கிறது இன்னொரு பக்கம் இலங்கை அரசு மீனவர்களை கைது செய்து பிரச்சனை செய்கிறது. அன்றாடம் தொலைக்காட்சி செய்திகள் இதைதான் சொல்லிக்கொண்டு இருக்கிறது. இதற்கு என்னதான் தீர்வு? என்னதான் முடிவு?

நிறம் மாறாத பூக்கள் / சிறுகதை

              நிவேதா... அவசர அவசரமாக சமைத்துக்கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் ஒருவித சோகம் குடிக்கொண்டிருந்தது. இதற்கு காரணம் தன் அன்பான கணவன் தன்னை விட்டு சென்றுவிடுவானோ என்ற கவலைதான் இவர்களுக்கு திருமணம் ஆகி ஆறு மாதம்தான் ஆகிறது. அருண்மொழி  நல்ல அழகானவன் ஒரு தனியார் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிகிறான். திடீரென்று ஒருநாள் நெஞ்சுவலி என்று மயங்கி விழுந்தவனை ஹாஸ்பிட்டலுக்கு தூக்கி சென்று பார்த்தபோது. டாக்டர் சொன்ன விஷயம் இவளுக்கு அதிர்ச்சியை தந்தது. இவன் இன்னும் ஆறுமாதத்திற்குதான் உயிரோடு இருப்பார் என்று சொன்னவுடன் இவளுக்கு அந்த நொடியே பாதி உயிர் போய்விட்டது போல் உணர்ந்தாள். தன் கவலையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வலம் வந்தாள். அந்த கவலைதான் இவளுக்கு ஏதோ சுயநினைவு வந்தவளாய் மணியை பார்த்தாள். மணி எட்டைத் தாண்டிக்கொண்டிருந்தது.

Monday, 19 October 2015

ஆயுத பூஜை

ஆடம்பரத்திற்காக வாங்கப்பட்ட பொருள்கள்
அனைத்தும் தூசித்தட்டி கழுவி காயவைத்து
கொழு பொம்மையாக அடுக்கி வைக்கப்பட்டு
ஆயுத்தமாகிறது ஆயுதபூஜைக்கு..!

Sunday, 18 October 2015

கைரேகை

என் உள்ளங்கை ரேகையாக
உனது நினைவுகள் என்றும் அழியாது
அதனால்தானோ என்னவோ
என் எதிர்காலத்தில்
நீ இருப்பாய் என்று
கணித்து சொன்னது
கைரேகை ஜோசியம்..!

-துவரங்குறிச்சி வீ.சந்திரா


Saturday, 17 October 2015

மின்மினி பூச்சி

ஒரு மின்மினி பூச்சி
கண்சிமிட்டிக் கொண்டே
எனதருகே வருகிறது
நான் உன்னை நினைத்து
ரசித்தபடியே உறங்க செல்கிறேன்..!


Friday, 16 October 2015

வெந்தயம் / மூலிகை மருத்துவம்

வெந்தயம்

இது எந்த நோயை குணமாக்கும்?

விதை:
சிறுநீர்பெருக்கும், வறட்சியகற்றும், காமம் பெருக்கும்.

நிலவும் மலரும் / தொடர்கதை

               காவியா... பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தாள். வேறொன்றுமில்லை கடிதம்தான் அவளின் அபிமான எழுத்தாளருக்கு இது 25 வது கடிதம் இதுவரை எதற்கும் பதில் வரவில்லை ஆனால் இவளுக்கு சலிப்பதே இல்லை ஏனெனில் இவள் மனது முழுவதும்  பிரபல எழுத்தாளர் கௌரிமனோகரிதான் நிறைந்திருக்கிறார். 24 மணி நேரமும் அவரை பற்றிதான் சிந்தனை, கற்பனையில் அவரோடு பேசிக்கொண்டு இருக்கிறாள் அந்தளவிற்கு அவரின் எழுத்து இவளை ஈர்த்திருக்கிறது.

             "ம்ம்ம்... என்ன எழுதலாம்... சரி வழக்கம்போலவே ஆரம்பிப்போம்.  அன்புள்ள அக்காவிற்கு, நான் நலம். நீங்கள் நலம்தானே? அப்புறம் அக்கா... உங்களை அக்கா என்று அழைக்கலாம்தானே. உங்களுடை நாவல் படித்தேன் படிக்க படிக்க நேரம் போனதே தெரியவில்லை பத்து தடவைக்கு மேல் படித்துவிட்டேன் இடையிடையே கண்ணீர் சிந்த வைத்துவிட்டீர்கள். கதை மிக அருமை எப்படி இப்படி உங்களால் எழுத முடிகிறது.

அப்புறம், என்னுடைய கடிதங்கள் உங்களுக்கு கிடைக்கிறதா அல்லது கிடைத்தும் நீங்கள் படிக்கின்றீர்களா என்றே எனக்குத் தெரியவில்லை. நான் ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை நீங்கள் படிக்கின்றீர்களா என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது? உங்களுக்கு எத்தனையோ ரசிகர்கள் கடிதம் எழுதுவார்கள் பத்தோடு பதினொன்றாக என் கடிதத்தையும் சேர்த்து குப்பையில் போட்டுவிடாதீர்கள். எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும், பேசவேண்டும் உங்கள் போட்டோவும், போன் நம்பரும் வேண்டும் எனக்கு அனுப்பி வையுங்கள் இல்லையெனின் கன்னிதீவு மாதிரி என் கடிதம் தொடரும். தொல்லைகள் அதிகரிக்கும் எப்படி வசதி? சரி இப்ப நான் போறேன்  ஆனால் மீண்டும் வருவேன்...

என்றும் ப்ரியமுடன்,
காவியா.

Wednesday, 14 October 2015

முருங்கை கீரை சாம்பார் / தஞ்சாவூர் சமையல்

            சாம்பாரில் பல வகைகள் இருக்கிறது அதில் சேர்க்கின்ற சேர்மானங்கள் எல்லாம் ஒன்றுதான் ஆனால் அதில் சேர்க்கப்படுகின்ற காய்கறிகளை வைத்தே தனித்தனியாக சொல்லப்படுகிறது. இப்போ நாம செய்யப்போறது முருங்கை கீரை சாம்பார்.

            இதை சிலர் பருப்பு மட்டும் சேர்த்து வைப்பார்கள் நான் இப்போது பருப்போடு தேங்காய் சேர்த்து வைக்கப் போகிறேன். பருப்பு இல்லாமலே தேங்காய் அரைத்து ஊற்றியும் வைக்கலாம். இதை சிலர் கீரைச்சாறு என்று கூட சொல்வார்கள் இதன் சுவையும் அருமையாக இருக்கும்.



தேவையான பொருட்கள்:-

துவரப்பருப்பு - 100 கிராம்
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1 ஸ்பூன்
தேங்காய் - 1 கப்
முருங்கை கீரை - 1 கப்
கத்தரிக்காய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு

Sunday, 4 October 2015

நட்பு

நட்பில் எதும்
பொய்யில்லை
என்றாய்..!
ஆனால் உன் நட்பை
மட்டும் ஏன்
பொய்யாக்கி போனாய்..?

வலி

நீ...
மின்னலைப் போல்
படம் காட்டி அடிக்கடி
ஓடி மறைந்து கொள்கிறாய்
நானோ உன்னைத் தேடித் தேடி
தொலைந்து போகிறேன்..!

மவுனம்

உன்னைப்போல்
இருக்கக் கூடாதென்று
நினைத்தேன்
நீ பேசாத நேரங்களில்
இப்போது

Thursday, 1 October 2015

முட்டைத் தொக்கு /சமையல்

தேவையான பொருட்கள்:
முட்டை - 1
இஞ்சி - சிறு துண்டு
சின்ன வெங்காயம் - 25 கிராம்
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 1
சோம்பு - சிறிது
மிளகாய்த்தூள் - 1/2 அல்லது 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - சிறிது