Friday, 29 July 2016

அறுவடை

சிலர் நம்மை காயப்படுத்த
சில விஷயங் (விதை)களை
விதைத்துக் கொண்டே செல்கிறார்கள்
நாம் அதை மகிழ்ச்சியாக
அறுவடை செய்வது தெரியாமலே...

#மகிழ்ச்சி

இரக்க குணம் யாருக்கு?

               நான் வசிக்கும் இடத்தில் இருந்து சற்று தள்ளி பிளாட் பாரத்தில் குப்பைத் தொட்டிக்கு அருகே தான் அந்த பாட்டியின் இருப்பிடம்.  புங்கை மர நிழலில் கால் நீட்டிய படி அமர்ந்து இருக்கும். ஒரு பையில் சில துணிகள் அருகில் ஒரு தட்டு ஒரு டம்ளர் இதுதான் அந்த பாட்டியின் அசையும் அசையா சொத்துக்கள். நான் அந்த வழியாக செல்லும்போது அந்த பாட்டியை பார்த்துக்கொண்டே செல்வது வழக்கம். இன்று லேசாக மழை அந்த பாட்டி எங்கே தூங்கியிருக்கும் என்று சிந்தனையோடு சென்றேன். 

Thursday, 28 July 2016

வனத்தில் சிக்கிய மனம் / தொடர்

               தஞ்சையோ, தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பிறந்தவர்களுக்கு மற்ற ஊர்களுக்கு செல்ல பிடிக்காது அத்தனை விருப்பம் இருக்காது. அதற்கு காரணம் இருக்கிறது ஏனெனில் இங்கே உள்ள சூழல் அப்படி. நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடுகின்ற தஞ்சை அல்லவா... காவிரி ஆற்றின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்களுக்கு மற்ற ஊர்களின் தண்ணீர் வேம்புதான். அதுமட்டுமல்ல கலாச்சாரமுமஹ, பண்பாடு, பாரம்பரியம் என்ற மண் சார்ந்த மனிதர்கள் அத்தனை எளிதில் மனம் மாற இயலாது. அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.. தஞ்சையை விட்டு போகக்கூடாது என்றிருந்தேன் காலத்தின் சூழல் என்னை சென்னை கொண்டு வந்து சேர்த்தது.

Tuesday, 26 July 2016

தொலைந்த விமானம்

முன்பு
விமானம் பறந்து செல்கையில்
எதிர்பார்ப்பு இருந்தது
ஏமாற்றத்தோடு பார்த்தேன்...!

Friday, 22 July 2016

சிபாரிசு வேண்டாம்

         


         உறவினர் மூலமோ, தெரிந்தவர் மூலமோ, நண்பரின் மூலமோ கிடைக்கின்ற வேலை என்றுமே நிறந்தரமில்லாததது.

          உன் திறமைக்கு உனக்கு வேலையில்லை உனக்குத் தெரிந்தவரின் திறமைக்கே உனக்கு வேலைக்கிடைத்திருக்கிறது.

Wednesday, 20 July 2016

திசை மாறிய காற்று - viedo


                   கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி இதுவரை உங்களை கஷ்டபடுத்தியது போதாது என்று செவி வழியாகவும் தொல்லைக்கொடுக்க ஆரம்பித்துவிட்டேன்.... ஹா....ஹா....



கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்...... அய்யோ......

Sunday, 17 July 2016

Siva puranam - 1









சிவபுராணம் படித்திருப்போம் அதுவே பாடல் வழியாக செவிக்கு விருந்தாக வாருங்கள் கேட்டு பார்த்து மகிழ்வோம் .