என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (36)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (16)
- மருத்துவம் (25)
Thursday, 13 August 2026
பழங்காலத்தில் நாம் செய்த சமையல்
பழங்காலத்தில் நாம் செய்த சமையல் முறைகள் தான் இப்ப ட்ரெண்டிங்கில் இருக்கு அதாவது ,50,60,70,80 ,90s காலங்களில் நம் முன்னோர்கள் நாம் செய்த சமையல் அதற்கு பயன்படுத்திய பாத்திரங்கள் இப்பதான் ட்ரெணட் ஆகுது. அதுல,
கரண்டி ஆம்லெட்: இது நான் சிறுவயதில் அதாவது 90 s ல விறகு அடுப்பு எரிஞ்சுகிட்டு இருக்கும் அதுல சோறோ குழம்போ வெந்துகிட்டு இருக்கும் அந்த நேரத்தில் பார்த்திங்கன்னா தேவையில்லாத பாத்திரங்கள் அதிகமா இருக்காது ஒரு எண்ணெய் சட்டி ஒரு குழம்பு சட்டி அப்படித்தான் இருக்கும் இப்ப கதையே வேற ஏழெட்டு எண்ணெய் சட்டி இப்ப வைச்சிருக்கோம் அப்ப இல்ல அந்த சமயத்துல விறகு அடுப்பு எரியும் போது அதுக்குள்ள கரண்டில கொஞ்சம் எண்ணெய் ஊத்தி அதுல முட்டைய கலக்கி அதுல ஊத்தி அவரசத்துக்கு போட்டு சாப்பிடுவோம் அப்படி கரண்டிய கரியாக்கி அது வீணாயுடுச்சுன்னு திட்டு வாங்கியிருக்கோம். அது அப்ப இருந்தே இருக்கு ஆனால் அது இப்ப புதுசா கண்டுபிடிச்ச மாதிரி டரெண்ட் ஆகிட்டு இருக்கு இது புதுசு இல்ல பழசுதான்னு இங்கே பதிவு பண்றேன்.
அடுத்து, தட்டு இட்லி இந்த இட்லி பார்த்திங்கன்னா அந்த காலத்துல எங்க அம்மாவோட அம்மா சமைக்கிற காலத்தில் இட்லி பானையெல்லாம் கிடையாதாம். அப்ப மண் சட்டியோ மண் பானையோ அதுல வாய்ப்பட்டில் வெள்ளைத்துணிய கட்டி அதுல இட்லி மாவை ஊத்தி ஒவ்வொன்னா எடுப்பாங்களாம். அதுதான் இப்ப தட்டு இட்லின்னு இப்ப பேமஸ் ஆகிட்டு புதுசா ட்ரெண்ட் ஆகுறது சந்தோஷம்தான் ஆனால் அது பழசுதான். அதே மாதிரிதான் இந்த கொட்டாங்கச்சி இட்லியும் அந்த காலத்தில் கொட்டாங்கச்சி பின்புறம் நல்லா சீவிட்டு ஆப்பையும் கிண்ணமாகவும் பயன்படுத்தினார்கள். இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனால் கொட்டாங்கச்சியில்தான் டீயே குடித்திருக்கிறார்கள் அப்ப அதுவும் புதுசு அல்ல பழசுதான்
மூங்கில் பிரியாணி : அந்த காலத்தில் காட்டு வாசிகள் சுரை குடுவை, இந்த மாதிரி மூங்கில்கள் வைத்துதான் பாத்திரங்களாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆப்பிரிக்கா காடுகளில் வசிக்கும் இப்பவும் இந்த சுரை குடுக்கைை பயன்படுத்துகிறார்கள் தண்ணீர் அடைத்து வைப்பது, தேன் சேகரிப்பதுன்னு இந்த மாதிரி மரத்தால் ஆன மூங்கில்கள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கு.. அதையே ட்ரெண்ட் ஆக்கி விற்பனை ஜோரா நடந்துகிட்டு இருக்கு .
இப்ப ட்ரெண்ட் ஆவதில் தவறில்லை ஆனால் பெரிய ஹோட்டல்களில் கொட்டாங்கச்சி இட்லி, மூங்கில் பிரியாணி, கரண்டி ஆம்லேட், தட்டு இட்லின்னு விலை அதிகம் வைத்து விற்பதுதான் தவறு. இயற்கை உணவு நல்லதுதான் விலைவாசிதான் அதிகமாக இருக்கிறது. பழசு திரும்ப வந்தாலும் அதில் பெரிசா காசு பார்க்கிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அதைவிட கொடுமையான விஷயம் என்னான்னா எந்த பாத்திரத்தில் செய்றோமோ அந்த பாத்திரத்தின் பெயர் அந்த கறிக்கு முன்னாடி வந்துவிடுகிறது. மண்சட்டி மீன் குழம்பு, கல் தோசை, தவா பிரியாணி, பானை பிரியாணி, ஹா..ஹா... இப்படி ஒரு வியாபாரம்.. ஒன்னும் சொல்றதுகில்ல.. நான் ஏதாவது விட்டிருந்தால் நீங்க சொல்லிட்டு போங்க மக்களே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment