Saturday 28 June 2014

புத்தகம்

                          நட்பு என்பது ஒரு புத்தகம் அதில் சின்ன சின்ன சுகங்கள் வார்த்தைகளால் நிறைந்து கிடக்கிறது. சின்னதாய் ஒரு காத்திருப்பு சின்னதாய் ஒரு கோபம் சின்னதாய் ஒரு சண்டை சின்னதாய் ஒரு கெஞ்சல் சின்னதாய் ஒரு கொஞ்சல் சின்னதாய் ஒரு சந்திப்பு சின்னதாய் ஒரு பிரிவு சின்னதாய் ஒரு ஏக்கம் சின்னதாய் ஒரு வலி சின்னதாய் ஒரு பரிவு இவை அத்தனையும் நிறைந்ததுதான் நட்பு.

                         தனது ஒவ்வொரு பக்கத்திலும் நம்மை சிரிக்க வைக்க, சிந்திக்க வைக்க, அழவைக்க, ஆறுதல் சொல்ல, விட்டுக்கொடுக்க, சகித்துக்கொள்ள கவலைப்படும் நேரங்களிலும் கஷ்டப்படும் நேரங்களிலும் தன்னம்பிக்கை கொடுக்க வைக்கிறது. அந்த புத்தகத்தை பொறுமையாக படிப்பவர்கள் தூசிபடாமல், பூச்சு திண்ணாமல் பத்திரப்படுத்தி வைப்பவர்களிடம் மட்டுமே அது நீண்ட நாட்களாக அவர்களோடு இருக்கிறது. அவசரகாரர்கள், பொறுமை இழந்தவர்கள் கைகளில் அந்த புத்தகம் இருந்தால் அது கிழிக்கப்பட்டு அதன் ஏடுகள் காற்றில் பறந்து விடுகிறது.

                         நல்ல புத்தகம் நல்ல நண்பன் அதன் பக்கங்கள் நமக்கு காட்டும் சொர்க்கங்கள் ஆனால் அந்த நல்ல புத்தகத்தை நாம் தேடவேண்டும் தேடி படிக்க வேண்டும் கிடைத்து விட்டால் அதை பத்திரமாக பாதுகாக்க் வேண்டும். கிடைத்தும் தொலைத்து விட்டால் நஷ்டம் புத்தகத்திற்கு அல்ல நமக்குதான் அது வேறொரு கைகளில் கிடைத்துவிட்டால் அது மீண்டும் கிடைப்பது கஷ்டம்.

No comments:

Post a Comment