Monday, 21 July 2025

திருவெற்றியூர் பாகம்பிரியாள்

திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு ஒரு முறை என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா நான் மூனு பேரும் பாகம்பிரியால் கோவிலுக்கு போனோம்.இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கோவில் அது. என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா ரெண்டு பேரும் அந்த கோவிலுக்கு போகனும்னு ஒரு வருசமா உண்டியலில் காசு சேர்த்து அந்த காசுல பஸ் செலவு ஆரம்பிச்சு அந்த கோவிலுக்கு போற வரைக்கும் ஆகுற செலவு அந்த காசுல தான் செலவு பண்ணின்னாங்க. எனக்கும் அந்த காசுல தான் செலவு செய்து கூட்டிட்டு போனாங்க அங்க போன பிறகுதான் தெரியும் அந்த அம்மன் சிவனோடு இருக்கிற ஒரு கோவில் என்று அதற்கு முன் தெரியாது அதுவரை அம்மன் கோவில் என்றே நினைத்திருந்தேன். பாகம்பிரியாள் என்ற பெயர் தான் விளங்கியிருக்கிறது.  அந்த கோவில் அருகே இருக்கும் புற்றில் சேவல் பலி கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.



Tuesday, 27 May 2025

திருக்கடையுர் போகலாம் வாங்க

திருக்கடையூர் போகவேண்டும் என்று சட்டென்று தோண அம்மாவும் நானும் அதிகாலையிலயே மயிலாடுதுறை பயணித்தோம்.. பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அங்கிருந்து கும்பகோணம் அங்கிருந்து மயிலாடுதுறை அங்கிருந்து திருக்கடையூர் சென்றடைந்தோம். சரியாக பட்டுக்கோட்டையில் இருந்து 6 மணிக்கு கிளம்பினோம்  பஸ் தான் மன்னார்குடிக்கு டிக்கெட் 20 ரூபாய் இருவருக்கும் 40 மன்னார்குடியில் 7 to 8  கும்பகோணம் 2 டிக்கெட்  50 ரூபாய் 9 மணிக்கு மயிலாடுறை சென்றுவிட்டோம். மயிலாடுறையில் 9 மணி to திருக்கடையூர் 10 மணி. 2 டிக்கெட் 60 ரூபாய். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்ல பணம் இல்லை மகளீர்  இலவச பேருந்து அங்கிருந்து திருக்கடையூர் ஒரு மணி நேரம் ஆச்சு ஆக சரியாக 11 மணிக்கு கோவிலுக்கு வந்துவிட்டோம். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமா இருந்தது  நாங்கள் கோவிலுக்கு நுழையும் வேளையில் மேளத்தாளத்தோட நாதஸ்வரம் பழத்தட்டோடு வந்துகொண்டிருந்தார்கள் அது எங்களை வரவேற்பது போல் இருந்தது.. 



Thursday, 8 June 2023

திருவணைக்காவல் போகலாம் வாங்க

                  ரொம்ப நாளாக எந்த கோவிலுக்கும் போக நேரமில்லை. சமீபத்தில் எனது பிறந்த நாள் அன்று திருவணைக்காவல் கோவில் சென்றேன். தஞ்சாவூர் பஸ் ஸ்டான்டில் திருச்சிக்கு 1to1 பஸ் நின்றிருந்து தஞ்சையில் ஏறினால் திருச்சியில் தான் போய் இறங்க முடியும் வேற எங்கும் வண்டி நிற்காது. நான் அந்த பேருந்தில் ஏறினேன் பஸ்ஸில் ஏறியதும் ஜன்னல் ஓர சீட்டா பார்த்து உட்கார்ந்தேன் கன்ட்ரைக்கடர் டிக்கெட் ..டிக்கெட்... ம்மா.. இப்பவே டிக்கெட் வாங்கிடுங்கம்மா கன்ட்ரைக்டர் வரமாட்டார் என்று சொல்லிக்கொண்டே வந்தார் நான் ஆச்சரியத்தோடு திருச்சி ஒன்னு என்று பணத்தை நீட்டினேன். அவரும் டிக்கெட்டை கொடுத்துவிட்டு நகர்ந்து சென்றார். நடத்துநர் இல்லாத பேருந்தா என்ற வியப்பு எனக்குள் பரவாயில்லையே இது கூட நல்லாதான் இருக்கு என நினைத்துக்கொண்டேன். எனக்கு அருகே இருந்த பெண்ணுக்கும் அதே ஆச்சரியம்தான். பஸ் ஏறிய சற்று நேரத்தில் பஸ் கிளம்பியது என் அருகே இருந்த பெண் கண்ணை மூடி தூங்க ஆரம்பித்தது. நான் பேக்கை திறந்து கடையில் வாங்கிய மசால் வடையை கொஞ்சம் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு ஜன்னல் வழியே பார்வையை வீசினேன் நெடுஞ்சாலை மிக அழகாக இருந்தது. 5 வருடத்தில் நிறைய மாற்றம் தெரிந்தது வழியெங்கும் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைத்திருந்தன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி சென்றேன். கையில் இருந்த மொபைலை எடுத்து திருச்சியை நோக்கி பயணம் என்று பேஸ்புக்கில் ஒரு பதிவை போட்டேன் அன்று எனது பிறந்த நாள் என்பதால் சில நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள் அதற்கெல்லாம் நன்றியை தெரிவித்தேன் என்னதான் நம்மை நேரில் பார்க்காது பழகாது இருந்தாலும் மனம் நிறைந்து வாழ்த்து சொல்ற மனசு பெரிய மனசுதானே.. நம்மோடு பழகியவர்கள் கூட வாழ்த்து சொல்ல மனசு வராதா போது யாரோ எவரோ சொல்ற அந்த வாழ்த்து மனசுக்கு சந்தோஷம்தான். இந்த நவீன உலகத்தில் இது சற்று ஆறுதலான விஷயம்தான். சற்று நேரத்திற்கெல்லாம் திருச்சி வந்துவிட்டது எனக்கு இன்னும் வியப்பு கூடிவிட்டது ஒரு மணி நேரத்தில் இந்த பஸ் திருச்சி வந்துவிட்டதே என்று. பஸ்ஸை விட்டு இறங்கியதுமே திருவணைக்காவல் பஸ் எனக்காக ரெடியா நிற்பது போலவே நின்றது நான் பஸ் ஏறியதும் பஸ் புறப்பட்டது இந்த பஸ் திருவணைக்காவல் போகுமா என்று டிரைவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏன்னா நாம தெரியாம ஏறிவிட்டு அப்புறம் அவர்களிடம் திட்டு வாங்கி இடையில் இறங்க கூடாதில்லையா அதனால். சற்று நேரத்தில் திருவணைக்காவல் வந்துவிட்டது நானும் இறங்கி மெல்ல நடந்தேன் சாலையில் இருப்பக்கமும் கடைகள் பூஜை பொருட்கள் இருந்தது ஒரு பூக்கடையில் பூ வாங்கினேன் நல்ல நெருக்கமாக கட்டிய மல்லியப்பூ  முழம் முப்பது ரூபாய் இரண்டு முழம் வாங்கினேன் சற்று தள்ளி ஒரு அர்ச்சனை கடையில் அர்ச்சனை வாங்கினேன் அம்பாளுக்கா? அய்யனுக்கா என்றார் கடைக்காரர் அய்யனுக்கே கொடுங்கோ என்றேன். அவரும் நான் கேட்ட எல்லாவற்றையும் கொடுத்தார் நான் வாங்கிகொண்டு பணத்தை கொடுத்தேன் அவறும் புன்முறுவலோடு வாங்கிக்கொண்டு இதை பிள்ளை வையுங்கன்னு இலவச இணைப்பா அருகம்புல்லை நீட்டினார். 

Saturday, 8 April 2023

கெண்டை மீன் குழ்ம்பு|வறுவல்

பழைய முறையில் கெண்டை மீன்நகுழம்பு
செய்முறை:
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்


https://youtu.be/TTblYcxhQwE

Saturday, 29 October 2022

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் போகலாம் வாங்க




              ஒரு நாள் திடீர்னு சென்னைக்கும் பக்கத்துல இருக்கிற 
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு போகனும்னு தோணுச்சு நாம வழக்கமா அப்படித்தான் கிளம்புவோம். காலையில் 7 மணிக்கு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு பஸ் ஏறினேன் நான் நினைச்சேன் பக்கத்துலதான் இருக்கும் போயிட்டு சீக்கிரம் வரலாம் னு அப்புறம் தான் தெரியுது அது சென்னையில் இருந்து 60கி.மீ னு அச்சச்சோ இது தெரியாம நாம பாட்டுக்கும் அசால்டா கிளம்பிட்டோமேன்னு உள்ளுக்குள்ள திக்..திக்.

Friday, 28 October 2022

புத்தக வாசிப்பு என்பது ஆழ்நிலை தியானம் போன்றது

முன்பெல்லாம் புத்தக வாசிப்பின் பசி எனக்கு அதிகமாக இருந்தது. கைகளில் புத்தகம் இல்லாத நாட்களை நான் வெறுமையாக உணர்ந்திருக்கிறேன். எழுத்துக்கூட்டி படித்த காலத்திலே ராணிகாமிஸ் படிக்கத் தொடங்கினேன் அதன் பிறகு தொடர்ந்து கொண்டே இருந்தது. படிக்காத புத்தகமும் இல்லை தெரியாத எழுத்தாளரும் அல்ல. படிக்க படிக்க நிறைய அனுபவம் கிடைத்தது ஆனால் மனிதர்களிடம் இருந்து விலக்கி வைத்தது. சாலை ஓரங்களில் கூட பேப்பர்களை பொரிக்கு வந்து படித்த நாட்கள் உண்டு அந்தளவுக்கு புத்தக புழுவாக என்னால் இப்போது ஒரு புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை. 

Sunday, 9 October 2022

ரவா அப்பம் செய்வது எப்படி

கீழே உள்ள லிங்கை அழுத்தி தெரிந்துகொள்ளவும்

https://youtu.be/ZEhCEw2i_C4

Thursday, 22 September 2022

ஏக்கம் குட்டிக்கதை

அம்மா... அம்மா... ஒரு நாளைக்கு தியேட்டருக்கு போயிட்டு சினிமா பார்த்திட்டு நல்ல ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வருவோமா..." பொன்னி ஆசையாக தன் அம்மாவிடம் கேட்டாள்.

" ஆமா... நீ வேணா போய் சாப்பிடு எனக்கு வேணாம்" அம்மா மல்லிகா முகத்தை சுழித்தபடி சொன்னாள்.

"உனக்கு ஞாபகம் இருக்காம்மா இருபது வருசத்துக்கு முன்னாடி முருகைய்யா தியேட்டர்ல படம் பார்த்துட்டு வருவோம் அதுக்கு எதிரே ஒரு சின்ன ஹோட்டல் ஒன்னு இருக்கும் அதுல எல்லாரும் சாப்பிட்டுட்டு இருப்பாங்க சோறு, மீனு, கறி, முட்டையின்னு வெளுத்துக்கட்டுவாங்க. நான் ஆசையா பார்த்துகிட்டு உன்கிட்ட கேட்பேன் நீ.. அதுக்கெல்லாம் காசு இல்ல ஒரு சாப்பாடு பதினைஞ்சு ரூபான்னு சொல்லிட்டு கூட்டிட்டு வந்திருவே... ஒரு நாள் கூட வாங்கி தந்தது இல்ல. தியேட்டருக்கு போனா பாப்கார்ன் கேட்டு அழுவேன் வயிறு வெந்து போயிரும்னு அதையும் வாங்கி தரவே மாட்டே.. இப்ப என்னகிட்ட அதை வாங்குற அளவுக்கு காசு இருக்கு ஆனால் இப்பவும் நீயும் வர மாட்டேங்கிற என்னையும் வாங்கி சாப்பிட விட மாட்டேங்கிறே.. ஏம்மா என்றாள் தழுதழுத்த குரலில்..

மல்லிகாம்மாவால் ஒன்றுமே பதில் சொல்ல முடியல இதுதான் அவர்கள் இயல்பு..

Monday, 19 September 2022

வாலை மீன் குழம்பு செய்வது எப்படி


தேவையான பொருட்கள்: 


வாலை மீன் 1 கிலோ
தக்காளி - 2
வெங்காயம் - 1 கப்
பச்சைமிளகாய்- 7
புளி- ஏலுமிச்சை அளவு
குழம்பு மசாலா - தேவைக்கு ஏற்ப
வெந்தையம்  - 1 ஸ்பூன்
சீரகம்- சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் சிறிது.
கடலெண்ணெய்- தேவைக்கேற்ப


செய்முறை: 



கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

Saturday, 10 September 2022

மீனும் நண்டும் 20. நிமிஷத்துல சமைக்க முடியுமா?

மீனும் நண்டும் ஒரே நேரத்தில் எப்படி சமைக்கிறதுன்னு பார்க்கலாம். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்க


https://youtu.be/JQaL8kNGomc