Monday, 30 July 2018

காலனை வென்ற கலைஞர் மற்றுமொரு மார்க்கண்டேயன்

இப்போது வருகின்ற பதிவுகள் பார்க்கும் போது கலைஞரை திட்டித்தான் வருகிறது. என்ன காரணம் சொல்லி திட்டுகிறார்கள் தெரியுமா? அவருக்கு மூன்று மனைவிகள், ஊருக்கு ஒரு பொண்டாட்டி, 2g ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை இந்த மூன்றுதான் அவருடைய பெருங்குற்றமாக கருதப்படுகிறது.

மூன்று மனைவிகள் :

இவருக்கு மூன்று மனைவிகள் தவறதுதான் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கொள்கையோடு வாழாமல் மூன்று மனைவிகளை திருமணம் செய்தது தவறுதான். ஆனால் இன்று எத்தனை ஆண்கள் ஒரு மனைவியோடு மட்டும் வாழ்கிறார்கள் பிற பெண்களை அக்காவாகவும், தங்கையாகவும் எத்தனை ஜென்மங்கள் பார்க்கின்றார்கள்? அப்படி நினைத்திருந்தால் ஊருக்குள் ஏன் பாலியல் குற்றங்கள் நடக்குது?

Saturday, 21 July 2018

சிகப்பி

காலை மணி 9 ஆடி வெள்ளி என்பதால் நான் சாமி படங்களை துடைத்துக்கொண்டு இருந்தேன் வெளியே ஏதோ சத்தம் கேட்டது படங்களை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடிபோய் பார்த்தால். சிகப்பி பாதி தென்னை மரம் உயரத்திற்கு பறந்து போய்கொண்டு இருந்தாள். ஆஹா குஞ்சை பருந்து தூக்கிவிட்டதா என்று என் கண்கள் அங்குமிங்கும் தேடியது ஆனால் ஒன்றும் என் கண்ணில் சிக்கவில்லை.. சிறிது நேரத்தில் கலவரமுகத்துடன் சத்தம் போட்டுக்கொண்டே வந்தாள் சிகப்பி. சிகப்பி நான் வளர்க்கும் கோழி, அவள் நாலு குஞ்சுகளுக்கு தாய் ஏழு குஞ்சுகளை பொரித்தாள் மூன்று இறந்து போனது. தற்போது நாலு குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறாள். அவள் பெரும் கோவக்காரி முட்டை அடை வைக்கும் வரை என்னை சுத்தி வருவாள் அடைகாத்து குஞ்சு பொரித்துவிட்டால் பத்திரகாளியாக மாறி கொத்தி விடுவாள் வளர்க்கும் என்னையே அவள் விட்டு வைப்பத்தில் என்றால் கூட வளரும் கோழி, நாய்களை சும்மா விடுவாளா ராட்ஷியாக பிடிங்கி எடுத்துவிடுவாள்.

Wednesday, 18 July 2018

ஆயுதம் ஏந்துவோம்

பெண்கள் இரவில் தனியாக செல்ல வேண்டாம்

முகநூலில் புகைப்படம் வைக்க வேண்டாம்

தெரியாத ஆண்களோடு பேச வேண்டாம்

உங்களுடைய சுய விவரங்களை தெரியாத நபர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்

வெளியில் செல்லும் போது நகைகள் அணிய வேண்டாம்