திருவொற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்கு ஒரு முறை என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா நான் மூனு பேரும் பாகம்பிரியால் கோவிலுக்கு போனோம்.இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கோவில் அது. என்னோட ப்ரண்ட் அவங்க அம்மா ரெண்டு பேரும் அந்த கோவிலுக்கு போகனும்னு ஒரு வருசமா உண்டியலில் காசு சேர்த்து அந்த காசுல பஸ் செலவு ஆரம்பிச்சு அந்த கோவிலுக்கு போற வரைக்கும் ஆகுற செலவு அந்த காசுல தான் செலவு பண்ணின்னாங்க. எனக்கும் அந்த காசுல தான் செலவு செய்து கூட்டிட்டு போனாங்க அங்க போன பிறகுதான் தெரியும் அந்த அம்மன் சிவனோடு இருக்கிற ஒரு கோவில் என்று அதற்கு முன் தெரியாது அதுவரை அம்மன் கோவில் என்றே நினைத்திருந்தேன். பாகம்பிரியாள் என்ற பெயர் தான் விளங்கியிருக்கிறது. அந்த கோவில் அருகே இருக்கும் புற்றில் சேவல் பலி கொடுத்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.
என் எண்ணச் சிதறல்கள் சிந்தனைச் சிறகுகளாக விண்ணில் பறக்க விடுகிறேன் ஏனெனில் சிறகில்லா சிறுபறவை நான்..!
- ஆன்மீகம் (29)
- இலக்கியம் (9)
- இலங்கை வானொலியின் குரல் (9)
- கட்டுரை (106)
- கவிதை (153)
- சிறுகதை (20)
- தஞ்சாவூர் ஸ்பெஷல் சமையல் (43)
- படக் கவிதைகள் (12)
- பயணக்கட்டுரை (11)
- மருத்துவம் (25)
Monday, 21 July 2025
Tuesday, 27 May 2025
திருக்கடையுர் போகலாம் வாங்க
திருக்கடையூர் போகவேண்டும் என்று சட்டென்று தோண அம்மாவும் நானும் அதிகாலையிலயே மயிலாடுதுறை பயணித்தோம்.. பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அங்கிருந்து கும்பகோணம் அங்கிருந்து மயிலாடுதுறை அங்கிருந்து திருக்கடையூர் சென்றடைந்தோம். சரியாக பட்டுக்கோட்டையில் இருந்து 6 மணிக்கு கிளம்பினோம் பஸ் தான் மன்னார்குடிக்கு டிக்கெட் 20 ரூபாய் இருவருக்கும் 40 மன்னார்குடியில் 7 to 8 கும்பகோணம் 2 டிக்கெட் 50 ரூபாய் 9 மணிக்கு மயிலாடுறை சென்றுவிட்டோம். மயிலாடுறையில் 9 மணி to திருக்கடையூர் 10 மணி. 2 டிக்கெட் 60 ரூபாய். மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்ல பணம் இல்லை மகளீர் இலவச பேருந்து அங்கிருந்து திருக்கடையூர் ஒரு மணி நேரம் ஆச்சு ஆக சரியாக 11 மணிக்கு கோவிலுக்கு வந்துவிட்டோம். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமா இருந்தது நாங்கள் கோவிலுக்கு நுழையும் வேளையில் மேளத்தாளத்தோட நாதஸ்வரம் பழத்தட்டோடு வந்துகொண்டிருந்தார்கள் அது எங்களை வரவேற்பது போல் இருந்தது..