Friday 2 March 2018

பிஞ்சிலே பழுத்த பழம் (3)

                                                    -தொடர்ச்சி
           



               சிறுவயதில் காதல் என்பது ஒரு இன கவர்ச்சியே அது அத்தனை பக்குவபடாதது. எப்போதும் அது வாழ்க்கைக்கு ஒத்து வராது இன்றைய பிள்ளைகள் அதை மறுக்கிறார்கள் நல்லா உல்லாசமாக சுத்துகிறார்கள் தியேட்டர், பீச் என்று இரவில் செல்கிறார்கள் கேட்டால் பாய் பிரண்ட் தட்ஸ்ஆல் னு சொல்லிட்டு போறாங்க இன்னொரு பக்கம் வீட்டில் பார்க்கின்ற பையனையோ பெண்ணையோ கல்யாணம் செய்து விட்டு எல்லாவற்றையும் மறந்து விட்டு போய்விடுகிறார்கள் இதுதான் இன்றைய உண்மையான காதல். இப்படிதான் கண்ணனுக்கும் நிர்மலாவுக்கும் காதல் காட்டுத் தீ போல் படர்ந்தது சைவமாக இருந்த காதல் அசைவாக மாறியது.



           நிர்மலா வழக்கம் போல் கண்ணனுக்கு போன் செய்தாள்  "என்னங்க அம்மா எப்ப ஊருக்கு கிளம்புறாங்க?

          "இப்பதான் கிளம்பிட்டு இருக்காங்க அவங்க போனதும் உனக்கு போன் பண்றேன் நீ வந்திடு.."

          "நான் இப்ப பஸ் ஸ்டாண்டுலதான் நிக்கிறேன் சீக்கிரம் அவங்களை அனுப்பி வைய்ங்க அப்பாகிட்ட காலேஜ் போறதா பொய் சொல்லிட்டுதான் வந்திருக்கேன் யாராவது என்னை பார்த்திட்டு சொல்லிட்டா அவ்வளவுதான்..."

           "சரி..சரி.. நான் போய் அனுப்பிட்டு வர்றேன் நீ போனை வை.. " என்றபடி உள்ளே சென்றான். "என்னம்மா.. நீங்க கிளம்பிட்டிங்களா..? நான் மட்டும் எப்படிம்மா தனியா இருக்கிறது எனக்கு ரொம்ப போரடிக்கும் நீங்க போய் சித்தி வீட்டுல நல்லா சாப்பிடுவீங்க இங்கே நான் காஞ்சி கிடைப்பேன்.. அம்மா சித்திகிட்ட சொல்லி வரும்போது இறால் தொக்கு சமைச்சு வாங்கிட்டு வாங்கம்மா சித்தி நல்லா செய்வாங்க..." என்றான் அப்பாவியாக, ராசித்திக்கு இப்படி சொன்னாள் போதும் உச்சி குளிர்ந்து விடுவாள்.

           இது புரியாத ராசாத்தி.. "சீச்சீ.. என்னடா இப்படி சொல்றே... அங்கே நிறைய விதவிதமா இருக்கும் என்னால அங்க சாப்பிடவே முடியாதுடா உன் நினைப்பாதான் இருக்கும் சித்தி உனக்கு செஞ்சிதான் தருவா வரும் போது கொண்டு வர்றேன் அலையாதே... அப்புறம் தங்கச்சிகிட்ட சண்டையெல்லாம் போடாதே வீட்டுலையே இரு எங்கேயும் போகாதே... காலையில எழுந்து தண்ணி புடிச்சி வச்சிரு அவ சாதம் வடிச்சிருவா உங்க ரெண்டு பேருக்கும் சிக்கன் வாங்கி க்ரேவியா செஞ்சு வைச்சிருக்கேன் இப்பவும் சாப்பிட்டு நாளைக்கும் சூடு பண்ணி சாப்பிடுங்க அவகிட்ட எந்த வம்பும் வச்சுக்காத சொல்லிட்டேன். நான் சித்தி வீட்டுக்கு போறதே ரெண்டு நாள் நிம்மதியா இருக்கத்தான் நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு என் நிம்மதியை கெடுத்துறாதீங்க.. "

           "என்னம்மா நீங்க நான் பத்திரமா பார்த்துக்கிறேன் சரி சீக்கிரம் கிளம்புங்க லேட் ஆச்சு பஸ் வரப்போகுது அப்புறம் இந்த பஸ்சை விட்டா பதினோரு மணிக்குதான்.." அவசரப்படுத்தினான் கண்ணன்.

           "ராசாத்தி அனிதாவிடம் வந்து ரகசியமாக காதில் கிசுகிசுத்தாள் அவன் மேல ஒரு கண் வைச்சுக்க ப்ரோ சாவிய நான் இங்க வைக்கல எடுத்துட்டு போறேன் அவனை நம்ப முடியாது நீ ஸ்கூலுக்கு போயிடுவே அவன் வழக்கம் போல விளையாட்ட காட்டிருவான்.. நீ அவன் கூட சண்டை எதும் போடாதே அவன்கிட்டயும் சொல்லியிருக்கேன் என்ன எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு. உனக்கு ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி வைச்சிருக்கேன் புஜ்ஜிம்மாவும் நீயும் சாப்பிடுங்க சரியா சரி நீ ஸ்கூலுக்கு கிளம்பு நானும் கிளம்புறேன் லேட் ஆச்சு.."

           "சரிம்மா.. நான் போயிட்டு வர்றேன் டாட்டா.... "சொல்லியபடி சைக்கிளில் கிளம்பினாள் அனிதா.

          ராசாத்தியும் கண்ணனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். இவள் வருவதற்கு மூன்று நாள் ஆகும் அதை சாதகமா பயன்படுத்திக்க நினைச்சான் கண்ணன் இது புரியாமல் ராசாத்தி தன் மகன் ரொம்ப பாசமா இருக்கிறதா நினைத்துக்கொண்டு போகிறாள் . இந்த உலகில் சுயநலமில்லாத அன்பு எங்கே இருக்கு எல்லாம் ஏதோ ஒரு கணக்கோடுதான் நாட்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறார்கள். அதில் இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன வீட்டுக்கு வீடு இப்படிதான் இருக்கிறது.

            கண்ணன் நிர்மலாவுக்கு போன் செய்தான்.. ஒரு ரிங்கிலே எடுத்துவிட்டாள். "என்னங்க அம்மா கிளம்பிட்டாங்களா..?

           "கிளம்பிட்டாங்க நீ வந்திடு.."

           "இன்னும் பத்து நிமிஷத்துல வந்திருவேன்.." சொல்லிவிட்டு அலைபேசியை அணைத்தால். சொன்னபடியே பத்து நிமிஷத்தில் கண்ணனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் நிர்மலா.."

            "ஏ... நிம்மி வா..வா.. சீக்கிரம் யாராவது பார்த்திட போறாங்க.."

            "வெளியே யாருமே இல்ல பார்த்திட்டுதான் வந்தேன்.."

           "சரி.. வா" என்று கையை பிடித்து இழுத்து விசமத்தோடு சிரித்தான்.

           "ச்சீ... போங்க அந்த பக்கம் வந்ததும் இதென்ன   கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புங்க.."

          "என்னடி தப்பு? நாளைக்கு நாம ரெண்டு பேரும் கணவன் மனைவி ஆகப்போறோம் இதிலென்ன இருக்கு இப்படி சரி தவறுன்னு சொல்லவா  உன்னை வீட்டுக்கு கூப்பிட்டேன்... மீண்டும் அவளது கையை இருக்கமாக பிடித்து இழுத்து இதழில் அழுத்தமாக முத்தமிட்டான்.. அதுவரை தவறு தவறு என்று சொன்னவள் செயலிழந்து நின்றாள். சிறிது நேரத்தில் சுதாரித்து இங்க பாருங்க இப்படியெல்லாம் பண்ணினா நான் இப்பவே வீட்டுக்கு போயிடுவேன்.. பொய்யாக மிரட்டி வைத்தாள். ஆனாலும் இவளுக்கும் உள்ளுக்குள் ஆசை இருக்கதான் செய்தது.

         "என்ன நிம்மி.. இனிமே இந்த மாதிரி ஒரு நாள் வருமா.. அம்மாவை கிளப்ப நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? இன்னைக்கு மட்டும்தான் இனிமே நாம எப்ப இப்படி இருக்க முடியும் சொல்லு நல்ல சான்ஸ் நாம மிஸ் பண்ணக்கூடாது. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா.." கோபமாக கேட்டான்

           "இல்லங்க.. கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்புங்க.. உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்ல நாளைக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா யாருக்காவது தெரிஞ்சா என்னாகும் என்னைய அசிங்கம்மா நினைப்பாங்க இல்ல அதான் பயமா இருக்கு" எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள்.

            "எம்மேல உனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு நல்லா தெரியுது உன் மேல எவ்வளவு அன்பு வைச்சிருக்கேன் தெரியும்மா? நிறைய பேர் இப்ப அப்படிதான் இருக்காங்க நீதான் வீணா பயப்படுறே.."

            "நிஜம்மா ஒன்னும் பிரச்சினை வராது இல்ல "அவள் அப்படி கேட்கும்போதே அவனுக்கு புரிந்துவிட்டது கிளி சிக்கிறிச்சுன்னு.. அப்புறமென்ன இதற்காகவே காத்திருந்தது போல் அவன் காரியத்தில் இறங்கினான் ப்ரிட்ஜ்யை திறந்து மல்லியப்பூவை அவள் தலையில் வைத்துவிட்டான். பூ வைத்ததும் ஏதோ ஒரு பெரிய ஐஸ் கட்டியை தலையில் வைத்தது போல் அவள் சிலிர்த்து போனாள். இந்த பெண்கள் பூ விஷயத்தில் ஏன் இப்படி மயங்கி விழுகிறார்கள் என்று விஞ்ஞானியால் கூட இன்னும் கண்டு பிடிக்க முடியல. ஏற்கனவே ஒரு முறை ஒரு பூ கூட வாங்கித்தரலன்னு அவள் சண்டை போட்டு இருக்கிறாள். இன்று அது தானாக கிடைத்தது அதில் கொஞ்சம் மயங்கிதான் போனாள். அந்த மயக்கத்திலே அவள் மெல்ல கேட்டாள்.

             "ஏங்க.. நாம அலைபாயுதே படத்தில் வர்ற மாதிரி ரிஜிஸ்டர் ஆபிஸ்ல போய் கல்யாணம் பண்ணிக்கலாமா? அப்புறம் எனக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க முடியாதுல்ல"

           "உங்கப்பா உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணினா நாம யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கலாம்.  இப்ப நீ ஒன்னும் பேச வேணாம்.." என்றபடி அவளை இழுத்து அணைத்தான் அவளும் அதற்கு இசைந்தாள் இருவரும் இந்த உலகை மறந்தனர்.

           மதியம் இரண்டு மணி வெளியே காலிங் பெல் சத்தம் அலறியது. இருவரும் திடுக்கிட்டு எழுந்தனர். யாருங்க அது அனிதா ஸ்கூல்ல இருந்து வந்திருச்சோ மணி நாலு ஆச்சா ஐயயோ இன்னைக்கு மாட்டினோம். கண்ணன் வாட்ஸ்சை எடுத்து பார்த்துவிட்டு ச்சீ... மணி ரெண்டுதான் ஆகுது பயப்படதே இரு பார்த்துட்டு வர்றேன். இந்த நேரத்தில் யாரா இருக்கும் அந்த பக்கத்து வீட்டு பொம்பளையா இருக்குமோ மெல்ல லேசாக ரூம் கதவை திறந்தான்.

           அவன் நினைத்தது போல் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்தான். கண்ணனுக்கு அந்த பக்கத்து வீட்டு அம்மாவை கண்டாலே பிடிக்காது எப்ப வீட்டுக்கு வந்தாலும் எரிந்து விழுவான் இப்ப சொல்லவா வேணாம் கதவை திறந்த என்ன என்றான்.

          "அம்மா இல்லையா.."

           "அம்மா சித்தி வீட்டுக்கு போயிருக்காங்க நீ போங்க" என்றான் வெடுக்கென்று.

          "அவள் ஒரு மாதிரி சந்தேகத்தோடு அவனை பார்த்தபடி கிளம்பினாள் அவள் போகும் போதே வாசலில் புது லேடிஸ் செப்பல் கிடப்பதை கவனிக்க தவறவில்லை. நிர்மலாவீட்டுக்கு  வரும்போதே தூரத்தில் இருந்து அவள் கவனித்து விட்டாள் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வெளியே வராததால் சந்தேகப்பட்டுதான் நோட்டமிட வந்திருக்கிறாள்.

         கண்ணன் ரூமுக்குள் வந்தான் நிர்மலா பதறி போய் "யாருங்க அது?"

         "பக்கத்துவீட்டு பொம்பள எப்போதும் எங்க வீட்டுக்கே வரும் லூசு சில சமயம் நான் திட்டிவிட்டுறுவேன்.."

        "என்னை அது பார்த்திருக்குமோ...,"

        "தெரியல பார்த்தா பார்க்கட்டும் எங்கம்மாகிட்ட ஏதாவது சொன்னுச்சு அப்புறம் இருக்கு.."

         "சரி அதை விடு நீ சாப்பிடுறீயா..?"

         "ம்.. சரி நாம் போய் ரெடியாகி வர்றேன் பாத்ரூம் எங்கே இருக்கு வெளியிலையா..? "

        " ஆமாம்.. நானும் வரட்டா.. கண்சிமிட்டி சிரித்தான் "
"உதைப்பேன் ராஸ்க்கல் உன்னாலதான் இப்படியாச்சு எனக்கு பயமா இருக்குடா.."

         "ச்சீ... நீ ஒன்னும் பயப்படாதே.. சரி சீக்கிரம் போயிட்டு வா எனக்கு பசிக்குது.."
         நிர்மலா பாத்ரூம் சென்று முகம் கழுவி ப்ரஷ் ஆகி வந்தாள்.. கலைந்த தலையை சீவிக்கொண்டு கொஞ்சம் முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு என்ன சமையல் இன்னைக்கு.. கேட்டபடி கிச்சனுக்குள் போனாள்.

         "அம்மா சிக்கன் சமைச்சு வைச்சுட்டு போனாங்க சாப்பிட்டு பாரு சூப்பரா இருக்கும்..?"

         "ம்... என்னைவிட அம்மா நல்லா சமைப்பாங்களா..? வாயில் ஒரு சிக்கன் பீஸை போட்டு ரசித்து சாப்பிட்டுவிட்டு ஓரக்கண்ணால் பார்த்தப்படி கேட்டாள்.

       "நீயும் நல்லா சமைப்பே அம்மாவும் நல்லா சமைப்பாங்க போதுமாடா செல்லம் இதுக்கு மேல ஒரு கேள்வியும் கேட்காத எனக்கு ரொம்ப பசிக்குது நான் சாப்பிடப் போறேன் நீயும் சாப்பிடு" என்றான்.

         இருவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள் நிர்மலா சொன்னாள் "ம்.. அம்மா நல்லா டேஸ்டாதான் செஞ்சிருக்காங்க.. "

         "அதான் நான் சொன்னேன் இல்லை எங்க சார் வந்தா இங்கே தான் சாப்பிடுவார்.."

         "கண்ணா... எனக்கு ரொம்ப பயமா இருக்குடா நாம தப்பு பண்ணிடோம்னு "

          "ஏய்... சும்மா பயப்படாதே அடுத்து நாம எப்ப இப்படி மீட் பண்றது என்றான் சிறிதும் கவலையில்லாமல்.."

           "என்னைப்பத்தி உனக்கு கவலையே இல்லை உன் வேலை முடிஞ்சதும் மறுபடியும் அதுலையே நிக்கிற பார்த்தியா?"

           "கண்ணன் பதில் ஏதும் சொல்லாமல் சரி நிம்மி நீ கிளம்பு நான் கொண்டு வந்து பஸ் ஸ்டாண்டுல ட்ராப் பண்றேன்.. அனிதா ஸ்கூல் விட்டு வந்திரும் இப்பவே மணி மூனு ஆச்சு நீ வீட்டுக்கு போறதுக்கும் சரியா இருக்கும்..."
            " ம்.. சரி என்றபடி தட்டை கழுவி வைத்துவிட்டு பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பர தயாரானாள். கண்ணன்  பைக்கை ஸ்டாட் செய்து வைத்துக்கொண்டு ரெடியாக நின்றான். நிர்மலா வீட்டை பூட்டி சாவியை நிலையின் மேலே மறைவாக வைத்துவிட்டு யாராவது பார்க்கிறார்களா என அங்குமிங்கும் பார்த்தபடி வந்து பைக்கில் ஏறி அமர்ந்தாள். கண்ணன் அவளை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து கலைந்து கிடந்த கட்டிலை சரி செய்து வைத்தான் எந்த ஒரு சந்தேகமும் வராதபடி மாற்றி வைத்துவிட்டு மறுபடியும் அதிலே படுத்து தூங்கிப் போனான்.

           நாட்கள் வருடங்களாக மாறி போயின நிர்மலா நிர்மலா காலேஜ் இறுதி ஆண்டை முடித்தாள். கண்ணனும் நிர்மலாவும் ஜாலியாக உல்லாசமாக சுற்றி திரிந்தனர். ஒருநாள்  திடீரென்று கோவிலுக்கு போவதாக சொல்லி நிர்மலாவை அவள் அம்மா கூட்டிச் சென்றாள்  நிர்மலாவின் அப்பாவோ ரகசியமாக மாப்பிள்ளையோடு சிலரை கோவிலுக்கு அழைத்து வந்து  பேசி முடித்துவிட்டார். இவள் அதை எதிர் பார்க்கவில்லை கண்ணனுக்கு சொல்ல வழியும் இல்லை இவளின் மொபைலை அவள் அம்மா எடுத்து மறைத்து வைத்துக்கொண்டால். எல்லாம் சில நொடிகளிலே முடிந்து போனது. பிறகு போனை எடுத்து கண்ணனுக்கு தகவல் சொன்னாள். நான் வந்து உங்கப்பாகிட்ட பேசுறேன் என்று சும்மா ஒரு வார்த்தைக்காக தான் சொன்னான். ஏனெனில் கணவன் மனைவில் போல் சில நாள் வாழ்ந்து விட்டார்கள் அதன் பிறகு அவனுக்கு கொஞ்சம் கசந்து போனது. இவள் அடிக்கடி அறிவுரை சொல்வது அங்கே போகாதே இங்கே போகாதேன்னு கண்டிப்பது எல்லாமே வெறுப்பை உண்டு பண்ணியது அதான் இதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இவளோ தினமும் அழுது அழுது கண்ணனுக்கு போன் செய்து தொந்தரவு செய்தாள். கண்ணனுக்கோ தினமும் இப்படி செய்வதால் அவள் மீது எரிந்து விழுந்தான் சில நேரங்களில் போனை எடுக்காமல் தவிர்த்தான். இந்த மாதிரி சூழ்நிலையில் ஒருநாள் வீட்டுப்போனுக்கு அடிக்கையில் ராசாத்தி தான் போனை எடுத்தாள்.  மறுமுனையில் இருப்பது நிர்மலா என்றதும் என்னடி உங்களுக்குள் ஏதாவது சண்டையா அவன் மூஞ்சை தூக்கி வச்சுகிட்டு இருக்கான் அவள் அப்படி கேட்டதும்.

          நிர்மலா எல்லாவற்றையும் கொட்டத் தொடங்கினாள் அத்தை இப்ப அவர் எங்கூட சரியாவே பேசுறார் இல்ல வேற யாரோ ஒரு பொண்ணு கூட பேசுறாருன்னு நினைக்கிறேன் அவர் முன்னாடி மாதிரி இல்லை.... என்று அழுதாள்.

          இங்கபாருடி எம்புள்ளையின்னு நான் எப்பவும் உசத்தியா பேச மாட்டேன் அவனைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அவன் நிறைய பொய் சொல்வான் நல்ல பையன் இல்லன்னு உனக்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான் நீ நிறைய படிச்சு இருக்கே அவன் படிப்பை பாதியிலே விட்டுட்டான் பின்னாடி பிரச்சினை வரும்முன்னு சொல்லியிருந்தேன் நீ கேட்கவே இல்லை. இப்பவும் ஒன்னு கெட்டுப்போகல நீ உங்கப்பா சொல்ற பையனையே கட்டிக்க உங்கப்பா பெரிய ஆள் எம் பையனை ஏதாவது செஞ்சாலும் செய்வார் இதெல்லாம் தேவையா சொல்லு நாம நினைச்ச மாதிரி எல்லா வாழ்க்கையும் நடக்கிறது இல்ல நீ படிச்ச புள்ள புரிஞ்சுக்க.."


             "அய்யோ... அத்தை என்னால அப்படி முடியாது நாங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணிட்டோம் நான் அவருக்கு மனைவியா வாழ்ந்திட்டேன் இனிமே எப்படி இன்னொருத்தரை கல்யாணம் பண்றது...? கேவி.. கேவி அழுதாள்.

            "என்னடி.. சொல்றே இதெல்லாம் எப்ப நடந்துச்சு..? ராசாத்தியால் அதிர்ச்சியை தாங்க முடியாமல் கேட்டாள்.

           நிர்மலா ஒன்றுவிடாமல் நடந்த எல்லாவற்றையும் சொன்னாள். ராசாத்தி க்கு தலைசுற்றுவது போல் இருந்தது சின்னபுள்ளைங்கன்னு நினைச்சேன் ஆனால் இதுங்க இப்படி இருக்கேன்னு நினைத்து நினைத்து ஆதங்கப்பட்டாள். எம் பையனா இப்படி இதை எப்படி நான் அவருக்கிட்ட சொல்வேன் என்று புலம்பினாள். சரி நீ ஒன்னும் தப்பான முடிவு எதும் எடுக்காதே பொறுமையா இரு பேசிப்போம் என்று அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

           இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்தான் கண்ணன்.. வீடு அமைதியாக இருந்தது எப்போதும் டீவி ஓடிக்கொண்டு இருக்கும் இன்று அதுவும் இல்லை.. அம்மா ஹாலில் ஓரமாக படுத்திருப்பதை பார்த்துவிட்டு.. "என்னம்மா இங்கே படுத்து இருக்குறீங்க உடம்புக்கு ஏதாச்சும் முடியலையா என்ன ஹாஸ்பிட்டல் போகலாம் வாங்க..என்றபடி மேலே கை வைத்தான்.

          "ச்சீ.. கையை எடுறா ராஸ்க்கல் என்ன வேலைடா பண்ணித் தொலைச்சிருக்கே நீ... உன்னையா நான் தவம் இருந்து பெத்தேன்.. மூஞ்சையும் மொகரகட்டையும் பாரு எம் மூஞ்சியிலே முழிக்காதே போ அந்த பக்கம்.."  கடும் கோபத்தில் எரிந்து விழுந்தாள் ராசாத்தி.

            "என்னம்மா சொல்றீங்க நான் என்னம்மா தப்பு செஞ்சேன் இப்படி பேசுறீங்க.."

          "நீ என்ன தப்பு செஞ்சியா..? நீ என்ன தப்புதாண்டா செய்யல எல்லாத்தையும் செஞ்சிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறீயே.. நீ புள்ளையா நீ.... நான் உன்கிட்ட என்னைக்காச்சும் அம்மா மாதிரி நடந்திருக்கேனா ஒரு ப்ரண்ட் மாதிரி தானே நடந்துகிட்டேன். ஆனால் என்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிட்டியேடா.. நீ பொய் சொல்வேன்னு எனக்குத் தெரியும் ஆனா ஒரு பொண்ணுக்கு பாவத்தை செய்வேன்னு நான் நினைக்கவே நம்ம வீட்டிலும் ஒரு தங்கச்சி இருக்கு பொண்ணுன்னா எல்லாம் பொண்ணுதாண்டா அய்யோ... என்னால நினைச்சு கூட பார்க்க முடியல எம்புள்ள இப்படியான்னு.. இதையே சொல்லி.. சொல்லி புலம்பிக்கொண்டு இருந்தாள் ராசாத்தி.

           
கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நம்மள இப்படி மாட்டிவிட்டுட்டாளே என்று நிர்மலா மீது கோபம் வந்தது வந்த கோபத்திற்கு போனை போட்டு கண்டபடி திட்டி தீர்த்தான். என்கூட இனிமே பேசாதே நீ எவனை வேணா கட்டிக்க என் மூஞ்சிலையே முழிக்காதே.. என்ன பேசுறோம்னு தெரியாமலே பேசினான். அவளுக்கு ஆந்திரம் வந்தது அவளும் பதிலுக்கு பதில் சண்டை போட்டாள் நான் சொல்றதை நீ எதுவும் கேட்கிறது இல்லை உன் ஆசை தீர்ந்து போச்சு அதான் இப்ப வேற ஒருத்திய தேடுற எங்கப்பா அப்பவே சொன்னாரு நான் தான் கேட்கல இப்பதான் எல்லாம் புரியுது உன் லோக்கல் புத்திய காட்டிட்ட உன்னைவிட நல்ல பையனா எனக்கு ஏத்த மாதிரி ஒருத்தனை கல்யாணம் பண்றேன் பாரு.. என்றபடி போனை வைத்துவிட்டாள்.

மூன்று மாதங்களுக்கு பிறகு சுமுகமான சூழ்நிலை திரும்பியது. ராசாத்தியும் கோபத்தை மறந்து கண்ணனோட சகசமாக பேசத்தொடங்கிருந்தாள்  நிர்மலாவிடம் இருந்து எந்த போனும் வராமல் இருக்கவும் இராசாத்திதான் மகனிடம் கேட்டாள். "என்னடா இப்பெல்லா நிர்மலா போன் பண்றதே இல்ல, நீ என் கூட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டியா..? என்றாள்.

           "இல்லம்மா... நமக்கு இனிமே அது செட் ஆகாதும்மா நீங்க சொன்னதுதாம்மா சரி அது பெரிய இடம் என்னைவிட நிறைய படிச்சு இருக்கு தங்கச்சிக்கும் அதுக்கும் ஒத்து வராது அது ஒரு சைக்கோம்மா எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்கும் நமக்கு வேண்டாம்மா.." என்றான் வெறுப்பாக.

            "என்னடா சொல்றே... என்னை ஏமாத்துறதுக்காக சொல்றீயா..? இல்ல நிஜமாவே சொல்றீயா.. சிரித்தபடி கேட்டாள் ராசாத்தி.

          "நிஜம் தாம்மா...' என்றபடி ஒரு பத்திரிக்கை ஒன்றை நீட்டினான்..

          "ராசாத்தி ஒன்றும் புரியாமல் வாங்கி பார்த்து அதிர்ச்சியானாள். அது கல்யாண பத்திரிக்கை மணப்பெண் நிர்மலா மணமகன் சரவணன் என்று இருந்தது என்னடா இது அவளோடு அத்தை பையன் பேரு இது இல்லையே? என்றாள் அதிர்ச்சியாக.

           "நானே அதிர்ச்சியாகல நீங்க ஏம்மா அதிர்ச்சியாகுறீங்க...? அவங்க காலேஜ்ல புரபோசரா ஒருத்தன் இருக்கான் அவனைதான் கல்யாணம் பண்ணிக்க போறா.. அதுவும் காதல் கல்யாணம்தான். அன்னைக்கு நீங்க என்னை திட்டுனீங்க இல்ல அப்ப நான் கோபத்துல கண்டபடி திட்டி கல்யாணம் பண்ணிக்க முடியாது  யாரை வேணா கட்டிக்கன்னு சொல்லிட்டேன். அந்த கோபத்துல அவளும் கல்யாணத்து ஓகே சொல்லிட்டா ஏற்கனவே அவன் அவளை காதலிச்சிருப்பான் போல இப்ப என்னைவிட அவன் பெட்டரா தெரிஞ்சதும் கல்யாணம் பண்றா.. நான் நிறைய தடவை போனிலும் நேரிலும் ஸாரி சொல்லி பார்த்தேன் அவ கேட்கல அப்புறம் நானும் விட்டுட்டேன். என்கிட்டையே வந்து தைரியமா பத்திரிக்கையை நீட்டுறாம்மா... சரிதான் போடின்னு சொல்லிட்டேன் அவளுக்கே இன்னொருத்தனை கட்ட மனசு வரும் போது ஆம்பளை எனக்கு இருக்காதா..? நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்கம்மா இனிமே எனக்கு காதலே வேண்டாம் நீங்க எந்த பொண்ணை பார்த்து கட்டி வைச்சாலும் நான் கட்டிக்குவேன்..." என்றான்.

           "எப்படிடா அந்த பொண்ணுக்கு மனசு மாறும் உன்னைதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சத்தியம் பண்ணிச்சுடா கண்ணா நீ என்னதான் சொன்னாலும் எம் மனசு ஆறவே இல்லடா அவ அத்தை பையனை கட்டிகிட்டாலும் பரவாயில்லை அதெப்படிடா டக்குன்னு இன்னொருத்தனை லவ் பண்ணி கல்யாணம் பண்ண முடியும்?"

"இப்ப எல்லா பொண்ணுங்களும் அப்படி தாம்மா இருக்கு நேத்து பஸ்ல ஒரு பொண்ணு என்னயே பார்த்து லுக் விட்டுச்சும்மா... தினமும் என்னை பார்த்து சிரிக்கும்மா.." என்றான் சிரித்தப்படி.

வேணாம்டா கண்ணா நீ ஏற்கனவே ஒரு பொண்ணுக்கு பாவம் செய்திருக்க அதை மனசுல வைச்சுக்கு பெண் பாவம் பொல்லாததுடா.. " என்றாள்.

           "எம்மேல எந்த தப்பும் இல்லம்மா... வீடுன்னா கோபம் சண்டை இதெல்லாம் வரத்தான் செய்யும் அனுசரித்துதான் போகனும் அதுக்கு எம்மேல சந்தேகப்பட்டா கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே இப்படி இருந்தா ஆனபிறகு சொல்லவே வேணாம்.. அதான் தொலைஞ்சு போகட்டும்னு விட்டுட்டேன்... உங்க மகன் அழகுக்கு ஆயிரம் பொண்ணு க்யூவுல நிக்கிம்மா.. என்றான் சட்டை காலரை தூக்கிவிட்டபடி..

            ராசாத்தியும் அவனை தோளில் செல்லமா அடித்து போடா நீ எப்ப பாரு உனக்கு விளையாட்டுதான் உனக்கு எப்பதான் பொறுப்பு வருமோ தெரியலை என்றாள். எப்போதுமே தாய்க்கு தன் குஞ்சு பொன் குஞ்சுதான் மகன் எத்தனை தவறுகள் செய்தால் அம்மாக்காள் கண்டும் காணாதது போல் மன்னித்து விட்டு வி்டுகிறார்கள். இதுவே அவர்களுக்கு சாதகமா ஆகிவிடுகிறது. பெண்ணின் பெற்றோர் எப்போதும் கண்டிப்புடனே வளர்க்க நினைக்கிறார்கள் அது அன்பைத் தேடி வேறிடம் செல்கிறது. காதல் தவறில்லை ஆனால் பக்குவப்பட்டு வரனும் அப்பதான் வாழ்க்கை என்றால் என்னவென்று புரியும்.

           நிர்மலா எதுவும் நடக்காதது போல் வேற ஒருவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு போய்விட்டாள். இவனோ  வேறொரு  பெண்ணை ரூட்டு விட்டுக்கொண்டு இருக்கிறான்.. இது இனி ஒரு தொடர்கதைதான். கண்ணன் நிர்மலா இருவருமே எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவரவர் தனித்தனி வழியே நடக்கத் தொடங்கிவிட்டனர். இதுவா உண்மையான காதல்..? இவர்களுக்குள் ஏற்பட்டது ஒரு இன கவர்ச்சி மட்டுமே அது தீர்ந்ததும் அடுத்ததை தேடிக்கொண்டார்கள். காதல் என்பது ஒரு பொம்மை மாதிரி அது சிறு குழந்தையிடம் இருக்கும் போது இஷ்டத்துக்கு வைத்து விளையாடப்படுகிறது பிறகு வேறொன்றை கண்டதும் தூக்கியெறிப்படுகிறது. அதுவே 25 வயதை கடந்தவர்கள், வேலையில் இருக்கின்றவர்களின் கையில் கிடைக்கும் போது அந்த பொம்மை ஒரு குழந்தையா வளர்க்கப்படுகிறது அல்லது மிக உயரத்தில் வைத்து அழகு பார்க்கப்படுகிறது. காதல் உண்மையானதுதான் அது யாரிடம் இருக்கிறது என்பதை பொருத்து வளர்வதும் வீழ்வதும். இது பிஞ்சிலே பழுத்தப்பழம் வெம்பிதான் போகும்.

"ஹலோ... மச்சி என்னடா பண்றே சாப்பிட்டியாடா... நாளைக்கு மறக்காம வந்திருடா..." அந்த இரவு வேளையில் வழக்கம் போல் கண்ணன் யாரிடமோ கடலை போட்டுக்கொண்டு இருந்தான். தூரத்தில் சின்ன புள்ளியாய் ஒரு வெளிச்சம்  இருட்டை வெளிச்சமாக்கியதால் நிலவுக்கு இணையாக தன்னை நினைத்து அங்குமிங்கும் சந்தோஷமாக பறந்து கொண்டு இருக்கிறது இந்த மின்மினி பூச்சிகள்..!

                    *  முற்றும் *                                             
 

       

3 comments:

  1. Emperor Casino – Shootercasino
    2020 · 1 post · 3 authorsEco: 2020 · 1 author · Shootercasino: 2020 · 제왕카지노 1 หาเงินออนไลน์ author · Shootercasino: 2020 · 1 author · Shootercasino: 2020 바카라 · 1 author

    ReplyDelete